Skip to main content

நாட்டு கோழி உண்பதன் நன்மைகள்

நாட்டு கோழி உண்பதன் நன்மைகள் 

முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு


ஜெர்மனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வொய்ட் லெகான் எனப்படும் பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா? குடோனுக்குள் சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை. 

நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்கிறதென்றால் சும்மாவா? உண்மையில் அது வளரவில்லை... ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கிறார்கள். பிராய்லர் கோழிகள் சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. 100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது. கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது. 



STAR CHICKEN
Sri Sai City Plot No 1 First Street, Walajabad
Thammanur, Tamil Nadu 631605

contact us : 9952442425, 7904138958.

Comments

Popular posts from this blog

இயற்கை முறையில் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் விற்பனை

இயற்கை முறையில் நாட்டு கோழி வளர்ப்பு  மற்றும்   விற்பனை  STAR CHICKEN Sri Sai City Plot No 1 First Street, Walajabad Thammanur, Tamil Nadu 631605 contact us : 9952442425, 7904138958.

காடைகளுக்கு தீவண முறை

காடைகளுக்கு தீவண முறை:- ஜப்பானியக் காடைகளுக்கும், கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தலாம். காடைகளுக்கு குஞ்சு பருவத்தில் அளிக்கும் தீவனம் 26 முதல் 28 சதவீதம் புரதமும், 270 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீனிகளை மாற்றிப் பயன்படுத்த திட்டமிடும்பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதவீத புரதமும், 2800 கி.கலோரி எரிசக்தியும் உள்ள தீனியை உபயோகிக்கலாம். ஜப்பானியக் காடை வளர்ச்சி: சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடையுள்ள காடையை சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கிறது. காடை இறைச்சியில் அதிக புரதமும் (20.5 சதவீதம்), குறைந்த அளவு கொழுப்பும் (5 சதவீதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு:  STAR CHICKEN Sri Sai ...